தஞ்சை: இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என்றழைக்கப்படும் பொறியாளர் சர்.ஆர்தர் காட்டனின் 221-வது பிறந்தாள் விழா இன்று அணைக்கரை மற்றும் கல்லணையில் கொண்டாடப்பட்டது.
திருவிடைமருதூர் வட்டம், அணைக்கரை கொள்ளிடத்தின் குறுக்கே கீழணையும், முக்கொம்புவில் காவிரியின் குறுக்கே மேலணையும், கல்லணையில் மணல் போக்கிகள் மற்றும் வெண்ணாறு போன்ற நீர் ஒழுங்குகள் அமைத்து, பாசன கட்டுமானங்களைக் கட்டி, பாசன நீரை முறைப்படுத்தி, காவிரி டெல்டாவில் உள்ள பாசனப் பகுதிகளுக்கு நீர் வழங்குவதற்குத் தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என்றழைக்கப்படும் பொறியாளர் சர்.ஆர்தர் காட்டனின் 221வது பிறந்தாள் விழா இன்று அணைக்கரை மற்றும் கல்லணையில் கொண்டாடப்பட்டது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்