Sorting by

×

காங்கிரஸுடன் தனது முதல் கூட்டுத் தேர்தல் பிரசாரத்தில் தில்லி முதல்வரும், ஆத் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தேசிய தலைநகரில் ஜஹாங்கிர்புரி, மாடல் டவுனில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இரண்டு பேரணி நடத்தவுள்ளார்.

சாந்தினி சௌக்கில் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜெய் பிரகாஷ் அகர்வால், வடமேற்கு தில்லியில் உதித் ராஜ் மற்றும் வடகிழக்கு தில்லியில் கன்ஹையா குமார் ஆகியோரை ஆதரித்து முதல்வர் கேஜரிவால் இன்று சாலை பேரணியை நடத்துவதாக தில்லி காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தில்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் 3:4 என்ற விகிதத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் உள்ளனர். தில்லியில் உள்ள இந்தியா கூட்டணி தொகுதி உறுப்பினர்களிடையே மக்களவைத் தேர்தலுக்கான இடப்பகிர்வு ஒப்பந்தத்தின்படி, ஆம் ஆத்மி நான்கு இடங்களிலும், காங்கிரஸ் மூன்று தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

தனது இரண்டாவது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கன்ஹையா குமார், அதே தொகுதியிலிருந்து இரண்டு முறை எம்.பி.யாக இருந்த பாஜகவின் மனோஜ் திவாரியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

சாந்தினி சௌக் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரவீன் கண்டேல்வாலை எதிர்கொள்ளும் ஜெய் பிரகாஷ் அகர்வாலை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. அகர்வால் இதற்கு முன்பு 1984, 1989, 1996 ஆகிய ஆண்டுகளில் இதே தொகுதியில் வெற்றி பெற்றார்.

மறுபுறம், பாஜகவின் யோகேந்திர சந்தோலியாவை எதிர்த்து வடமேற்கு தில்லியில் போட்டியிட உதித் ராஜை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது. ராஜ் இதற்கு முன்பு 2014ல் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ராஜ் 2019 இல் காங்கிரஸில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *