Sorting by

×

கர்நாடகத்தில் காதலை மறுத்த இளம்பெண்ணை வீடு தேடிச் சென்ற இளைஞர், கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹூபள்ளி அருகே வீரப்பூர் ஓனி பகுதியில் வசித்து வருபவர் அஞ்சலி அம்பிகாரா(வயது 21). இவரை கிரிஷ் சவந்த்(வயது 23) என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவரின் காதலை அஞ்சலி ஏற்க மறுத்ததால், இன்று அதிகாலை வீட்டிற்கே சென்று கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து கிரிஷ் தப்பித்து ஓடியுள்ளார்.

இதுகுறித்து பெண்டிகேரி காவல்துறையினர் கூறுகையில், “இன்று அதிகாலை 5.45 மணியளவில் அஞ்சலி வீட்டின் கதவை கிரிஷ் தட்டியுள்ளார், அவர் கதவை திறந்ததும் கத்தியால் பல முறை குத்தி அஞ்சலியை கொன்றுவிட்டு தப்பித்து ஓடியுள்ளார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

மேலும், கிரிஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

கடந்த மாதம் ஹூபள்ளி தனியார் கல்லூரியில் காங்கிரஸ் பிரமுகரின் மகள், காதலை ஏற்க மறுத்ததால் சக மாணவரால் கல்லூரி வளாகத்திலேயே குத்தி கொலை செய்யப்பட்டார்.

தற்போது அதேபோல் ஒருதலை காதலால் இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *