மதுரை: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு விரைவாக சி்கிச்சை கிடைக்கவும், காப்பீடு மூலம் கிடைக்கும் நிதியில் மருந்து, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய, துறைத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏழை நோயாளிகள், உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகளைக் கட்டணமின்றி அரசு, தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய சிகிச்சைகளில் 15 சதவீத நிதி அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவுக்கு ஊக்கத் தொகையாகவும், குறிப்பிட்ட தொகை மருத்துவமனைக்கும் கிடைக்கும்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
