நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி 2-வதுநாளாக நேற்று தியானத்தை தொடர்ந்தார். காவி உடை, கையில் ருத்ராட்ச மாலையுடன் துறவிக் கோலத்தில் அதிகாலை 5 மணி அளவில் விவேகானந்தர் மண்டபத்தைவிட்டு வெளியே வந்த பிரதமர், இரு கைகூப்பி சூரிய உதயத்தை தரிசனம் செய்தார். இன்று மாலை வரை அவர் தியானத்தில் ஈடுபடுகிறார்.
கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி கடந்த 30-ம் தேதி மாலை வந்தார். பகவதியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகு, படகு மூலம் கடல் நடுவே உள்ளவிவேகானந்தர் மண்டபம் சென்றார். அங்கு பகவதியம்மனின் ஸ்ரீபாதத்தை தரிசனம் செய்தார். பின்னர், விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார். நள்ளிரவில் தியான மண்டபம் அருகே உள்ள அறையில் சற்று ஓய்வெடுத்தார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
