Sorting by

×

வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பேர் பலியானார்கள்.

வடக்கு காஸாவில் பெய்ட் லஹியா நகருக்கு மேற்கே அமைந்துள்ள பள்ளியின் மீது இஸ்ரேலிய விமானம் ஞாயிற்றுக்கிழமை குண்டுவீசித் தாக்குதல் நடத்திது. இந்த சம்பவத்தில் 4 பேர் பலியானார்கள்.

மேலும் பலர் காயமடைந்ததாக பாலஸ்தீனிய பாதுகாப்பு வட்டாரங்கள் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன.

இதற்கிடையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹமாஸ் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்குள் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிராக விமானப்படை துல்லியமான தாக்குதலை நடத்தியது என்று தெரிவித்துள்ளது.

வடக்கு காஸாவில் இஸ்ரேல் தாக்குதலுக்குள்ளான பள்ளி, இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்குமிடமாக மாற்றப்பட்டிருந்ததாக பாலஸ்தீனிய பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை காஸாவை தளமாகக் கொண்ட சுகாதார அதிகாரிகளின் அறிக்கையின்படி, அக்டோபர் 7, 2023 அன்று காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் வெடித்ததில் இருந்து இதுவரை 41,595 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 96,200 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *