திமுக தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தது.

அக்கட்சி சார்பில் பொதுச்செயலாளர் அருணாச்சலம் உட்பட நிர்வாகிகள் திமுகவின் குழுவோடு பேசியிருந்தார்கள். பேச்சுவார்த்தைக்கு பிறகு அருணாச்சலம் பேசியதாவது,
“திமுகவோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். திமுக கூட்டணிக்கு ம.நீ.ம எப்படி வலுசேர்க்கும் என தரவுகளோடு ஒப்படைத்தோம். எந்தெந்த தொகுதிகளில் ம.நீ.ம பெர்பார்ம் செய்திருக்கிறது என தொகுதி வாரியாக தரவுகளை கொடுத்தோம். அந்த தரவுகளை திமுகவின் குழு ஆய்வு செய்தது.
இது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைதான். நாங்கள் என்ன கேட்டோம் என்பதை வெளியில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. கோழி அடைகாப்பத்தை போல அடைகாத்து வருகிறோம். குஞ்சு பொriக்கும் போது உங்களுக்கே தெரியும்’ என்றார்.

மக்கள் நீதி மய்யத்தை உதய சூரியன் சின்னத்த்தில் நிற்க திமுக வலியுறுத்துவதாக தெரிகிறது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் என்கின்றனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
