நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை 2-வது நாள் துறவி கோலத்தில் தியானத்தில் ஈடுபட்டார். அவர் காவி உடையுடன் ருத்ராட்ச மாலையை ஏந்தியவாறு சூரிய வழிபாடு, கங்கா வழிபாட்டில் ஈடுபட்டார்.
இந்தியாவின் கடைக்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு தியானத்தை துவக்கினார். சனிக்கிழமை மாலை வரை அவர் 3 நாள் தொடர் தியானம் மேற்கொள்கிறார். சுவாமி விவேகானந்தர் இதே பாறையில் 132 ஆண்டுகளுக்கு முன்பு 3 நாள் தவம் இருந்த நிலையில், பிரதமரின் தியான நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
