‘India Today’ ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருந்தார்.
அவரிடம் காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், “ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று காங்கிரஸுக்கும் நன்றாக தெரியும். திமுக கூட்டணி நன்றாக இருக்கிறது. தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி வலுவாகத் தொடரும்.

மற்றவர்கள் நினைப்பது நடக்காது. அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என்னை ஒரு சகோதரனாகப் பார்க்கிறார். நானும் அவரை அப்படி தான் பார்க்கிறேன்.
எத்தனை கூட்டணி தமிழகத்தில் அமைந்தாலும் தேர்தலில் திமுக தான் வெல்லும். அரசியலில் களம் புகுந்ததில் இருந்து உழைத்து வருகிறேன். யார் காலிலும் விழந்து முன்னேறக் கூடாது.
உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கைக்கொடுப்போம் என்று கலைஞர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்” என்று பேசியிருந்தார்.
இதன் மூலம் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை என்பதை ஸ்டாலின் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவில், ” மக்கள் முடிவு செய்வார்கள் . கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை . 2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது தமிழக காங்கிரஸ் கட்சியின் தவறு” என்று பதிவிட்டிருக்கிறார்
மக்கள் முடிவு செய்வார்கள் .
கூட்டணி ஆட்சியா்?
அல்லது
ஒரு கட்சி ஆட்சியா என்பதை .
2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் @INCTamilNadu தவறு.— Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) February 11, 2026
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


