ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால், ஈரோட்டில் ஒரு வாரத்தில் மட்டும், 3 லட்சம் வாழைமரங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், தாளவாடி, பவானிசாகர், சத்தியமங்கலம், அந்தியூர், அத்தாணி, கோபி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த வாழைமரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
