மதுரை: கொள்கை ரீதியாக இருப்பவர்களுக்கு திமுகவில் பிரதிநிதித்துவம் இல்லையா? என, அமைச்சர் மனோ தங்கராஜ் பதவி நீக்கம் குறித்து மதுரை மக்கள் உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்த நிலையில், பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜின் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மதுரை கே.கே.நகர் பகுதியிலுள்ள மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மனோ தங்கராஜை அமைச்சரவை பதவியில் இருந்து நீக்கியது முற்போக்காளர்கள், மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு திமுக தலைமை பதிலளிக்க வேண்டும். கன்னியாகுமரி பகுதியில் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளை தடுத்து, குமரி ஆர்எஸ்எஸ் மாடல் என்பதை திராவிட மாடலாக மாற்றியவர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
