Sorting by

×

கோவை / திருப்பூர்: கோவை, திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கன மழை பெய்தது.

கடந்த சில தினங்களாக கோவையில் மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அதேவேளையில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. உக்கடம் அல்-அமீன் காலனி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. சிவானந்தா காலனி பகுதியில் மரம் விழுந்தது. இதையடுத்து, தீயணைப்பு படையினர் சென்று மரத்தை அகற்றினர்.

​இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *