கோவை: அவதூறு வழக்கில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக, சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனல் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிந்த கோவை சைபர் க்ரைம் காவல் துறையினர் கடந்த 4-ம் தேதி அவரை கைது செய்தனர். இச்சூழலில், சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதாவது, கோவை கோபாலபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் நேற்று (மே 14) புகார் அளித்தார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
