சென்னை: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த ஏ.கருணாகரன் (30) என்பவர், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் சேலம் மைன்ஸ் என்ற நிறுவனத்தில் போக்குவரத்து அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
கடந்த 11-ம் தேதி சாலைவிபத்தில் பலத்த காயமடைந்த அவர், சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
