புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் 320 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரும் வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்றைக்கு தள்ளிவைத்துள்ளது. நேற்று நடந்த வழக்கறிஞர் வாதத்தில் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கும்படி கோரப்பட்டது.
அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூன் 14 அன்று சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
