சென்னை: சென்னை கே.கே. நகரில் மழைநீா் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்த கூலித்தொழிலாளி பலியானார்.
சென்னை கே.கே.நகா் அம்பேத்கா் குறுக்கு தெருவில் மழைநீா் கால்வாய் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள்(பேரிகார்டு) வைக்கப்பட்டிருந்த நிலையில், மதுபோதையில் நடந்துசென்ற அதே பகுதியைச் சோ்ந்த அய்யப்பன்(35) ஞாயிற்றுக்கிழமை தடுப்புகள் மீது தடுமாறி விழுந்து, பள்ளத்தில் தவறி விழுந்து பலியானார்.
“எனக்கு துணையாக அல்ல; மக்களுக்கு துணையாக” – துணை முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த எம்ஜிஆா் நகா் காவல்நிலைய போலீசார், அய்யப்பன் உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக கே.கே. நகா் இஎஸ்ஐ மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
