சென்னை: சென்னை கோடம்பாக்கம் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இன்று (சனிக்கிழமை) காலை வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இந்நிலையில், ஆற்காடு சாலையில் உள்ள கார்ப்பரேஷன் சமுதாய நல மருத்துவமனை முன்பு, சாலையில் தீடீரென 5 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டது. இதைப் பார்த்துவிட்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள் சாலையில் வாகனங்களை அப்படியே நிறுத்தினர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
