சென்னை: அமெரிக்கா செல்ல வந்த ஆண் பயணி ஆடைகளைக் கலைத்து நிர்வாணமாக ஓடியதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து ஐக்கிய அரபு நாடான அபுதாபி செல்லும் எத்திஹாட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியரான பெத்தனன் இளங்கோ (47) என்ற பயணி, இந்த விமானத்தில் தனது தந்தையுடன் அபுதாபிவழியாக அமெரிக்கா செல்வதற்காக வந்திருந்தார். அவரும், அவருடைய தந்தையும், குடியுரிமை சோதனைப் பிரிவு நோக்கி நடந்துசென்று கொண்டிருந்தனர். அப்போது, பெத்தனன் இளங்கோ திடீரென்று தனது ஆடைகளைக் கலைந்துவிட்டு நிர்வாணமாக ஓடத் தொடங்கினார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
