சென்னை: தானியங்கி கதவுகள் இல்லாத 448 பேருந்துகளில் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு பேருந்தும் நாள்தோறும் 265 முதல் 270 கிமீ பயணிக்கின்றன. இவற்றில் நாள்தோறும் சுமார் 30 லட்சம் பேர் பயணித்து வருகின்றனர்.
குறிப்பாக காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது மாணவர்கள் உள்ளிட்டோர் ஆபத்தான முறையில் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்கின்றனர். இதைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்டோர் மூலம் எச்சரிக்கை செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
