சென்னை: நார்வே நாட்டில் நடைபெற்று வரும் செஸ் போட்டி தொடரில் முதல் முறையாக உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவும், மகளிர் நார்வே செஸ் அறிமுகப் போட்டியில் ஹம்பி கோனேருவை வீழ்த்தி வைஷாலியும் புதிய சாதனை படைத்துள்ளனர்.
இவர்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “நார்வே செஸ் போட்டி தொடரில் புதிய சாதனையாளர்களாக உருவெடுத்துள்ள தமிழகத்தின் கிராண்ட்மாஸ்டர்கள் பிரக்ஞானந்தாவுக்கும், வைஷாலிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
