கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கெம்பட்டி காலனி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இன்று வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், “மக்கள் எனக்கு வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளனர். என் வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் டோக்கன் விநியோகித்து வருகின்றனர். ஆனால் மக்கள் என்னை ஆதரிப்பதாகக் கூறுவது, எனக்கு பூரண மகிழ்ச்சி அளிக்கிறது. டோக்கன் என்றால் செந்தில்பாலாஜி. செந்தில்பாலாஜி என்றால் டோக்கன்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்ற போது, 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வென்றால் பணம் தருவதாக கூறிவிட்டு, டிடிவி வென்றதும் இவர் ஓடிவிட்டார். பின்னர் அரவக்குறிச்சியில் நின்றபோது 3 சென்ட் இடம் தருவதாக கூறிவிட்டு தராமல் கோவைக்கு ஓடிவந்துவிட்டார். இப்போது 8 ஆயிரம் ரூபாய் டோக்கன்கள் கொடுக்கிறார். தங்கம் கொடுப்பதாக வதந்தி பரப்புகிறார். ஆனால் அவர் ஒரு போதும், தங்கம் கொடுக்கமாட்டார். அப்படி கொடுப்பதாக இருந்தால் இப்போதே கொடுக்கவேண்டியது தானே? டோக்கன்கள் கொடுத்து ஏமாற்றி வென்று வருகிறார்” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
