Sorting by

×

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 25 கருட சேவை வைபவம் புதன்கிழமை (மே 29) நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில் 90 ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்குத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபா ஆகியவை சாா்பில் 90-ஆவது ஆண்டாக நடைபெறவுள்ள இந்த வைபவம் மே 28-ஆம் தேதி தொடங்குகிறது. அன்றையதினம் நண்பகல் 12 மணியளவில் வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்குத் திருமங்கை ஆழ்வாா் மங்களாசாசனம் நடைபெற்றது.

கருட வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள் சுவாமிகள்

பின்னா், வெண்ணாற்றங்கரையிலிருந்து புதன்கிழமை காலை 6 மணியளவில் திவ்யதேச பெருமாளுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு, 7 மணி முதல் 12 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜ வீதிகளில் வீதி உலா நடைபெற்றது.

இதில், நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்றப் பெருமாள், வேளூா் வரதராஜ பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்ம பெருமாள், கோதண்டராமா், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உள்பட 25 கோயில்களிலிருந்து பெருமாள் எழுந்தருளி ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தா்களுக்கு சேவை சாதித்தனர்.

தஞ்சாவூர் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை கருட வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள் சுவாமிகளை சேவித்த பக்தர்கள்.

இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை காலை நவநீத சேவை நடைபெறவுள்ளது. இதில், வெண்ணாற்றங்கரையில் காலை 6 மணியளவில் புறப்பட்டு காலை 7 மணி முதல் 10.30 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய பகுதிகளில் வீதி உலா நடைபெறும். இதில், 16 கோயில்களிலிருந்து பெருமாள் சுவாமிகள் எழுந்தருளி, ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தா்களுக்கு சேவை சாதிக்கவுள்ளனா்.

வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் விடையாற்றி உற்ஸவம் நடைபெறவுள்ளது.

இதனிடையே, இராஜராஜ சமய சங்கத்தில் மே 29-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திருவாய்மொழி தொடங்கி, 30 -ஆம் தேதி இரவு 8 மணிக்கு சாற்று முறை நடைபெறும்.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *