சென்னை: சென்னை சிபிஐ நீதிமன்ற கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதிகள் உள்பட 41 நீதிபதிகளை இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எம். ஜோதிராமன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை குடும்ப நல நீதிமன்ற முதலாவது கூடுதல் முதன்மை நீதிபதியாக பணியாற்றும் எம்.டி.சுமதி, புதுச்சேரி போக்சோ நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை மாநில போக்குவரத்து மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவராக பதவி வகித்த ஏ.டி.மரியா கிளேட் சென்னை தொழிலக தீர்ப்பாய தலைவராகவும், அங்கு பணிபுரிந்த தீப்தி அறிவுநிதி சென்னை வணிக வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
