Sorting by

×

சென்னை: திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில், பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் விசாரணைக்கு ஆஜராகததால், விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ள எழும்பூர் நீதிமன்றம், அன்றைய தினம், அவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவரது தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக பயன்படுத்தவில்லை என்று கடந்த ஏப்.13ம் தேதி மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வினோஜ் பி.செல்வம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதை எதிர்த்து அவர் மீது தயாநிதி மாறன் எழும்பூர் நீதிமன்றத்தில், கிரிமினல் அவதூறு வழக்கை தக்கல் செய்துள்ளார்.

​இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *