Sorting by

×

சென்னை: திருச்சிராப்பள்ளி, பாலக்கரை மெயின் ரோட்டில் நிறுவப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை நீதிமன்ற உத்திரவிற்கிணங்க மாற்று இடத்தில் நிறுவிட வேண்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, திருச்சியில் ஒரு சிலை நிறுவவேண்டும் என்ற சிவாஜி ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, சிலை அமைப்பதற்காக திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாநகராட்சித் தீர்மானத்தின் அடிப்படையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, திருச்சிராப்பள்ளி, பாலக்கரை மெயின் ரோட்டில், முன்பிருந்த பிரபாத் தியேட்டர் எதிரிலுள்ள ரவுண்டானாவில், 23-02-2011 அன்று முழு உருவ வெங்கலச் சிலை நிறுவப்பட்டது. அதன்பிறகு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு குறுக்கிட்டதால் திறப்புவிழா நடைபெறவில்லை.

​இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *