Sorting by

×

தில்லிக்கு இப்போதைக்கு மழையெல்லாம் கிடையாது, ஆனால், வெயில் பதிவாகி, பல புதிய சாதனைகள் மழையாகப் பொழியும் என்றும், தில்லியில் 122 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது.

கேரளம், தமிழகம், கர்நாடகம், தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களில் மழைப்பொழிவு ஆங்காங்கே பதிவான நிலையில், தலைநகர் புதுதில்லி உள்பட வட மாநிலங்களில் இந்த வாரம் தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகி வந்தது.

இந்த நிலையில் 50 டிகிரி செல்சியஸ் (122 ஃபாரன்ஹீட்) வரை வெயில் பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் திங்கள்கிழமை(மே 20) தில்லியில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ்க்கும் மேல் பதிவாகியிருந்தது. உச்சபட்சமாக தில்லியின் நஜப்கர் பகுதியில் வெப்பநிலை 47.4 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *