Sorting by

×

பாரதிய ஜனதா கட்சியின் தில்லி அலுவலகத்தில் வியாழக்கிழமை சிறியளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அலுவலகத்துக்கு பெரிதாக சேதாரம் ஏற்படவில்லை என கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜக வெளியிட்ட செய்திக் குறிப்பில், அலுவலக மின்சார மீட்டரில் மின்கசிவு ஏற்பட்டதால் இந்த தீ விபத்து மாலை 4.15 மணிக்கு ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புது தில்லி நகராட்சி கவுன்சில் ஊழியர்கள், தீயணைப்பு வீரர்களின் முயற்சியில் 15 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது.

4.30 மணியளவில் முற்றிலும் அணைக்கப்பட்டு மின்சார இணைப்பு சில மணி நேரங்களில் சரி செய்யப்பட்டுள்ளது. பெரிதாக சேதாரமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என பாஜக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *