Sorting by

×

புது தில்லி: தில்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறி ஒருவர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

புது தில்லியில் அமைந்துள்ள வருமான வரித்துறை அலுவலக கட்டடத்தின் 4வது தளத்தில் இன்று பிற்பகலில் தீ விபத்து நேரிட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

அலுவலகத்தில் சிக்கியிருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர் தீயணைப்புத் துறையினர். எனினும், வருமான வரித்துறை அலுவலகத்தின் கண்காணிப்பாளர் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *