புதுச்சேரி: தேசிய ஜூடோ போட்டியில் பங்கேற்ற புதுச்சேரி வீரர்கள் பரிசுகளை வென்றும், ரயிலில் கீழே அமர்ந்து பயணித்து வரும் சூழலில் இருப்பதாக பயிற்சியாளர் வீடியோவில் புகார் அளித்துள்ளார்.
தேசிய அளவிலான ஜூடோ தற்காப்பு கலை போட்டி இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 25-ம் தேதி முதல் நடந்தது. இதில் புதுவையில் இருந்து சென்ற விளையாட்டு வீரர்கள் நீலவேணி (16), மணிவண்ணன் (26) ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களின் பயிற்சியாளராக காவல் துறையில் பணியிற்றும் பாலசந்தர் உடன் சென்றுள்ளார். சென்னையில் இருந்து டெல்லி வரை செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்ற இவர்களுக்கு போகும்போது டிக்கெட் உறுதி செய்யப்பட்டது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
