ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே பெய்த கனமழையில் தற்காலிக பாலம் இடிந்து, மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் 3 கிராம மக்கள் அவதியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. அதேபோல் தேன்கனிக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 42 மிமீ மழை பெய்தது. இந்நிலையில் குந்துக்கோட்டையிலிருந்து அந்தேவனப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள ஆற்றின் இடையே புதிய பாலம் அமைக்க உள்ளதால், அதன் அருகே வெங்கடாபுரம், ராமச்சந்திரம், அனுமந்தபுரம் ஆகிய 3 கிராம மக்கள் சென்று வருவதற்கு வசதியாக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
