தமிழக பாஜகவின் துணைத் தலைவர் குஷ்பு சென்னை விமான நிலையத்தில் இன்று( பிப். 28) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியினர், திமுகவிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் விஜய்யிடமும் பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இனிவரும் காலங்களில், அவர்களால் நிச்சயமாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. வெறும் 4 மாநிலங்களில் மட்டும்தான் அவர்கள் ஆட்சி செய்கின்றனர்.
இப்போது ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திமுகவிடம் கேட்கின்றனர். ஆனால், ஆட்சியில் பங்கு தர மாட்டோம் என்று முதல்வர் உறுதியாக சொல்லி விட்டார்.
அவர்கள் கேட்பதை யார் கொடுக்கிறார்களோ அவர்களிடம் சென்று விடுவார்கள். உங்களுக்கு (காங்கிரஸ்) தைரியம் இருந்தால் ஒரு தேர்தலில் தனித்து நில்லுங்களேன். ஒரு சீட் ஜெயிக்க தகுதி இருக்கிறதா?” என்று காட்டமாக பேசியிருக்கிறார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
