Sorting by

×

மதுரை: உடல் தானம் செய்வதாக பதிவு செய்திருந்த, இறந்த முன்னாள் ராணுவ வீரரின் உடலை மக்களவைத் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தானம் பெற மறுத்தது. இதனால், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மூளைச் சாவு அடைந்தவரின் உடலில் இருந்து உடல் உறுப்புகளை தானம் கொடுப்பதற்கு அவர்களது உறவினர்கள் சம்மதிக்க வேண்டும். ஆனால், இறந்த பின் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக கொடுக்க விரும்புவோர், தாங்கள் உயிருடன் இருக்கும் போதே அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறு கழகத்தில் விண்ணப்பம் கொடுத்தால் போதும். அவர்கள் இறந்தபின், மருத்துவக்கல்லூரி நிர்வாகம் அவர்கள் உடல்களை பெற்றுக் கொள்ளும். அந்த உடல்கள், மருத்துவ மாணவர்கள் படிப்புக்கு பயன்படுத்தப்படும்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *