குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (நள்ளிரவு 1 மணி வரை) 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
️திருவள்ளூர்
️சென்னை
️வேலூர்
️திருப்பத்தூர்
️தருமபுரி
️திருவண்ணாமலை
️கள்ளக்குறிச்சி
️சேலம்
️நாமக்கல்
️கரூர்
️திருச்சி
️திண்டுக்கல்
️கோவை
️நீலகிரி
️ஈரோடு
️திருப்பூர்
️தேனி
️மதுரை
️சிவகங்கை
️விருதுநகர்
️ராமநாதபுரம்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
நெல்லை
தென்காசி
