திருவாரூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாகப்பட்டினம் தொகுதி மறைந்த எம்பி எம்.செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் இன்று (செவ்வாய் கிழமை) நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினரும், நாகப்பட்டினம் தொகுதி எம்பியுமான எம். செல்வராஜின் உடல் திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியில் உள்ள அவரது இல்லத்தின் அருகே அடக்கம் செய்யப்பட்டது. எம்.செல்வராஜ் எம்பி, உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த நான்காம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
