ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொடுத்த காலக்கெடு முடிவுக்கு வந்துள்ளது.
இதனையடுத்து நேற்று ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“செவ்வாய்க்கிழமை, இரவு 8 மணி. கிழக்கு நேர மண்டலம்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படவில்லை என்றால், ஈரான் மீது கடும் தாக்குதல் என்று எச்சரித்துள்ளார்.
ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள நேரம் இந்திய நேரப்படி நாளை மறுநாள் (ஏப்ரல் 8) காலை 6.30 மணி ஆகும்.

இதற்குள் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படவில்லை என்றால், “ஈரானில் மின் நிலையங்கள், பாலங்கள் அனைத்தும் அழிக்கப்படும். நீங்கள் நரகத்தில் வாழ்வீர்கள்” என்று பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.
ட்ரம்பின் இந்த அச்சுறுத்தல்களுக்கு ஈரானின் பதில்…
ஈரானிய அதிபர் அலுவலகத்தின் தகவல் தொடர்புப் பிரிவு துணை பிரதிநிதியான மெஹ்தி தபதபாயி, “போரில் ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்ட ஈடு வழங்கினால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்.
இந்த நஷ்ட ஈடும் கப்பல்கள் சுங்க வரியாகக் கட்ட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
