சென்னை: நில அபகரிப்பாளர்களுக்கு உடந்தையாக இருப்பதாக புகார் அளித்த நபரிடம், புகாரைத் திரும்பப் பெறும்படி மிரட்டல் விடுத்த வாணியம்பாடி வட்டாட்சியர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க ஜோலார்பேட்டை போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரியில் உள்ள அதனவூரைச் சேர்ந்த குமரேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘அதனவூர் கிராமத்தில் எனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்துக்கான தனிப்பட்டாவில், கோவிந்தராஜ் என்பவரின் பெயரை சேர்த்துள்ள திருப்பத்தூர் வட்டாட்சியராக பணிபுரிந்த சிவப்பிரகாசம், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ரூ. 20 லட்சத்தை லஞ்சமாக கேட்டார். இந்த பிரச்சினை தொடர்பாக வட்டாட்சியர் சிவப்பிரகாசத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வட்டாட்சியர் மீதான புகாரை 12 வாரங்களில் விசாரித்து முடிவெடுக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
