சென்னை: பழங்குடி மொழிகளை பாதுகாக்கும் கடமை நமக்குள்ளது என்று நிதித்துறைச் செயலர் த.உதயசந்திரன் கூறினார். தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைசார்பில் ‘தொல்குடி’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான 2 நாள் மாநாட்டை ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சென்னையில் தொடங்கிவைத்தார்.
இரண்டாம் நாள் நிகழ்வு சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. அழிந்துவரும் நிலையில் உள்ள பழங்குடியினர் மொழிகள், வாய்மொழி வழக்காறுகள், அம்மொழிகளை கற்பித்தலுக்கும் பயில்வதற்குமான ஆதாரங்கள், அவற்றைஆவணப்படுத்தல், பழங்குடியினர் மொழிகளுக்கு புத்துயிர் ஊட்டுவதற்கு நவீனத் தொழில்நுட்ப முறைகளையும், ஊடகங்களையும் பயன்படுத்துதல் போன்ற தலைப்புகளில் அறிஞர்கள் உரையாற்றினர். இதில்,சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
