Sorting by

×

திண்டிவனம்: ‘பிரதமர் நரேந்திர மோடி, கன்னியாகுமாரியில் தியானம் செய்வதில் எவ்வித தவறும் இல்லை. தேர்தல் நடத்தை விதிகள் இதற்குப் பொருந்தது. தியானம் செய்வது பிரதமரின் தனிப்பட்ட விருப்பம். பிரதமர் தியானம் செய்வதை முறைமுக தேர்தல் பிரசாரமாக கருதமுடியாது’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: ‘மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப் பதிவு ஜூன்1-ம் தேதி நடைபெற விருக்கிறது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இத்தேர்தலில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 400 இடங்களில் வெற்றி பெறும். இந்த வெற்றியின் மூலம் நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராவது உறுதி. தமிழகத்தில் பாஜக – பாமக கூட்டணி 20 இடங்களை கைப்பற்றும். மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்துக்குரிய திட்டங்களை பாமக போராடி பெறும். தமிழகத்தின் முன்னேற்றத்துக்கும் பாடுபடுவோம்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *