விருதுநகர்: கோடை மழை காரணமாக வத்திராயிருப்பு பிளவக்கல் அணையின் நீர்மட்டம் 29 அடியை நெருங்கும் நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நாளை(மே 16) முதல் பிளவக்கல் அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.
வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் பெரியாறு அணை மூலம் 40 கண்மாய்களும், 8 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால், கோடை காலத்திலும் அணையின் நீர்மட்டம் 25 அடிக்கு குறையாமல் இருந்தது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
