ஈரான் போர் தொடங்கி இன்றோடு நான்காவது வாரம் தொடங்குகிறது.
ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் என எந்த நாடும் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இல்லை.
போர் நிறுத்தம் வேண்டாம்
‘விரைவில் போர் முடிவுக்கு வரும்’ என்று நேற்று முன்தினம் (மார்ச் 19), அமெரிக்கா சொன்னதில், உலகம் கொஞ்சம் ஆசுவாசமாகியது.

ஆனால், அதற்கும் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘எனக்கு போர் நிறுத்தம் வேண்டாம். எதிரியை நாம் அடியோடு அழிக்கும் போது, போர் நிறுத்தம் செய்யமாட்டோம் என்று உங்களுக்கு தெரியும் தானே’ என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்கு ஈரான் போரில் உள்ள மிகப்பெரிய பிரச்னையே ‘ஹார்முஸ் ஜலசந்தி மூடலே’. இதை சரிசெய்ய தங்களது போர்க்கப்பலை அனுப்ப சொல்லி சீனா, ஜப்பான், நேட்டோ நாடுகளிடம் ட்ரம்ப் கேட்டார்.
சிலர் மறுத்துவிட்டனர்… சிலர் வாயைக் கூட திறக்கவில்லை.
நேட்டோ நாடுகள் – ‘கோழைகளே’
இதை தற்போது கடுமையாக சாடியுள்ளார் ட்ரம்ப்.
“அமெரிக்கா இல்லையென்றால், NATO வெறும் காகிதப் புலிதான். அணு ஆயுதம் கொண்ட ஈரானுடன் சண்டையிட நேட்டோ நாடுகள் வரவில்லை.
இந்த நாடுகளுக்குக் குறைந்த ஆபத்தோடு ராணுவ ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறோம். ஈரான் உடனான போரில் உதவாத அவர்கள், எண்ணெய் விலை உயர்வை பற்றிப் புகார் கூறுகிறார்கள்.
ஆனால் அதற்கு காரணமான ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க உதவ மறுக்கிறார்கள். கோழைகள்… உங்களை மறக்கமாட்டோம்” என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
