பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. இந்நிலையில், நேற்று மதியம் 2.30 மணிக்கு திடீரென கன மழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, பலத்த காற்று, இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழையால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது. பல்லடம் சாலை, தேர்நிலை ரவுண்டானா, மரப்பேட்டை பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடைகள் நிரம்பி, சாலையில் கழிவுநீருடன், மழைநீரும் கலந்து குளம்போல தேங்கியது. 31-வது வார்டு தன்னாசியப்பன் கோயில் வீதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அந்த பகுதியில் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
