ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி முக்கிய அரசியல் சென்றுகொண்டிருக்கிறது.
இஸ்ரேலும், அமெரிக்காவும் தங்கள் மீது போர் தொடங்கியதுமே ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதன் மூலம், உலக நாடுகளுக்கு செல்லக் கூடிய எரிசக்திகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது ஈரான்.
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல மிரட்டல்களை விடுத்து வருகிறார். ஆனால், எதற்கும் ஈரான் அசைவதாக இல்லை.
இந்த நிலையில், நேற்று, ஈரான் தரப்பு, ‘எதிரி கப்பல்களைத் தவிர, அனைத்து கப்பல்களையும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதிக்க தயார்… பாதுகாப்பும் கொடுக்கிறோம்’ என்று கூறியிருந்தது.

2 மில்லியன் டாலர்
ஆனால், தற்போது, ஈரானின் அரசு தொலைகாட்சி ஈரானிய சர்வதேச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது…
“ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல சில கப்பல்களிடம் இருந்து 2 மில்லியன் டாலர்களை வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது. இது இந்திய ரூபாயில் ரூ.18.8 கோடி”.
செலவு இருக்கிறதே
இது குறித்து ஈரானிய தலைவரான அலாவுத்தீன் போரூஜெர்டி கூறுகையில், ‘ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல 2 மில்லியன் டாலர் வசூலிப்பது ஈரானின் வலிமையைக் காட்டும்.
மேலும், போர் என்கிற போது செலவுகள் ஆகும். அதற்காக நாங்கள் இதை செய்ய வேண்டியதாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
