
சென்னை: மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை ஒட்டி ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் நேற்று பாரதியார் படத்துக்கு மரியாதை செலுத்தினர் தமிழக அரசு சார்பில் மகாகவி பாரதியாரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, காமராஜர் சாலையில் அவரது சிலை அமைந்துள்ள இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு பாரதியார் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழ் வளர்ச்சித் துறை செயலர் வே.ராஜாராமன், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு பாரதியார் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
