ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் நான்காம் கட்ட மக்களவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு இன்று(மே. 13) நடைபெற்று முடிந்துள்ளது.
மக்களவை தேர்தலுக்கான 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
ஆந்திரத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளுடன் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து ஒரே கட்டமாக திங்கள்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. அதேபோல், ஒடிஸாவில் முதல் கட்டமாக 4 மக்களவைத் தொகுதிகளுடன் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவைத் தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 13, மகாராஷ்டிரத்தில் 11, மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 8, சத்தீஸ்கரில் 7, பிகாரில் 5, ஜாா்க்கண்டில் 4 தொகுதிகளுக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது.
மே 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் மீதமுள்ள 3 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
