மதுரை: மதுரையில் செயற்கையாக பழுக்க வைத்த மற்றும் அழுகிய 300 கிலோ பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் கடுமையான வெப்ப தாக்கத்தில் இருந்து, மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக பழங்களை உட்கொண்டு வருகின்றனர், இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப் படுவதாகவும், அழுகிய பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் வந்தன.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
