புதுச்சேரி: மத்திய அரசு உத்தரவால் புதுச்சேரியில் பதிவு பெற்ற மீன்பிடி விசைப் படகுகளை கணக்கெடுப்பும் பணி தொடங்கியது. இணையதள பக்கத்தைப் புதுப்பித்து விரைவில் இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசுக்கு மீன்வளத் துறை அறிக்கையாக தரவுள்ளது.
மத்திய அரசின் மீன்வள அமைச்சகம் அனைத்து கடலோர பகுதி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தற்போது உள்ள மீன்பிடி தடை காலத்தில் அனைத்து பதிவு பெற்ற மீன்பிடி படகுகளையும் கள ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் மற்றும் உப்பளம் துறைமுகத்திலுள்ள மீன்பிடி விசைப்படகுகளை புதுச்சேரி மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்கள் நலச்சங்கங்கள் ஒத்துழைப்புடன் கள ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
