சென்னை: சென்னை மாநகராட்சியின் வீடற்றோர் காப்பகங்களில் தங்கிபடித்து 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 11 மாணவர்களை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கவுரவித்தார். சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் 50 வீடற்றோர் காப்பகங்கள் இயங்கி வருகின்றன.
இவற்றில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் வசிப்போர் தங்கியுள்ளனர். இங்கு தங்கியுள்ளவர்களில் ஏராளமான மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளுக்கும் சென்று படித்து வருகின்றனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
