இழுபறியில் நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணியின் பஞ்சாயத்துகள் அத்தனையும் ஒரு வழியாக ஓய்ந்திருக்கிறது. அறிவாலயத்தில் முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.

திமுக – காங்கிரஸ் கூட்டணி முறிவை நோக்கி சென்ற நிலையில், டெல்லியின் உத்தரவின் பேரில் ப.சிதம்பரம் கடைசி நிமிடத்தில் முதல்வருடன் பேசி கூட்டணியை இறுதி செய்திருந்தார். இந்நிலையில், இன்று திமுக – காங் கூட்டணி கையெழுத்தாகிறது என காலையிலிருந்தே தகவல் ஓடிக்கொண்டிருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை வர கோவாவிலிருந்து விமான டிக்கெட்டும் புக் செய்திருந்தார்.
கிரிஷ் சோடங்கர் 3:50 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்துவிட்டார். அவரை வரவேற்க செல்வப்பெருந்தகையும் சென்றிருந்தார்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காங்கிரஸ் குழு விமான நிலையத்திலேயே காத்திருந்தது. திமுக தரப்பில் ஒரு நம்பரை சொல்ல அதற்கு டெல்லி தலைமையிடம் ஒப்புதல் வேண்டி காங்கிரஸ் குழு காத்திருந்ததாக தகவல். இந்த இழுபறி சில மணி நேரங்களுக்கு நீடித்து பரபரப்பை கூட்டியது.

நீண்ட காத்திருப்புக்கு பிறகு காங்கிரஸ் குழு அறிவாலயம் நோக்கி புறப்பட, இரவு 7:30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு போன்றோர் அறிவாலயம் வந்தனர். கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை போன்றோரும் வர முதல்வர் முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
Updates shortly
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
