சென்னை: சொல்லாத புதிய திட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியதால் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘சொன்னதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்’ என்று முழங்கி தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காக புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களுக்கு வீடுகள் வழங்கும் ‘கனவு இல்லம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
