Sorting by

×

திமுக கூட்டணியில் இழுபறியாகவே நீடித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இறுதியாக திமுக வழங்குவதாக கூறிய 5 தொகுதிகளுக்கே ஒப்புதல் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் இறங்கி வந்தது என பேசிய மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ‘கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால், எல்லாருக்கும் சீட்டுகளை பகிர்ந்தளிப்பதில் சிக்கல் இருக்கிறது. அதனால் நாங்கள் கேட்ட 6 தொகுதிகளிலிருந்து ஒரு தொகுதியை குறைத்துகொள்ள சொல்லி முதல்வர் கேட்டார்.

எங்களின் மாநில செயற்குழுவால் சீட் குறைப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்களுக்கு திருப்தியில்லை. முதல்வரை அவரின் வீட்டில் சந்தித்தும் தொகுதியை குறைக்க வேண்டாம், 6 சீட்டே கொடுங்கள் எனக் கேட்டோம். அப்போதும் முதல்வர் அவர் தரப்பு சிரமங்களை சொல்லி, 5 சீட்டுகளை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினார்.

கூட்டணி
கூட்டணி

நாங்கள் எடுக்கும் முடிவு கூட்டணியின் ஒற்றுமையை குலைத்து, அதிமுக – பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே இதை ஏற்றுக்கொண்டோம். சென்னையில் ஒரு தொகுதி வேண்டுமென எங்களின் விருப்பப்பட்டியலை கொடுத்திருக்கிறோம். அதை நிறைவேற்றி கொடுக்குமாறு கேட்டிருக்கிறோம்’ என்றார்

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *